மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Saturday, August 19, 2017

‘கோடங்கி’ & ‘நட்சத்திரச் சிதறல்கள்’ கவிதை நூற்கள் அறிமுகம்- மஸ்கட்

வணக்கம் !
என்னுடைய ‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற இரு கவிதை நூற்கள் அறிமுகம் மஸ்கட் அஞ்சப்பர் உணவக அரங்கில் அகஸ்ட் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸுபைர் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.பத்ரிநாத் மற்றும் மஸ்கட் தமிழ்ச் சங்க முன்னாள் துணைத்தலைவர் திரு. சந்திரமோகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். திரு.பத்ரிநாத் அவர்கள் நூற்களின் பிரதிகளை வெளியிட்டு மதிப்புரை உரையாற்றினார். திரு. சந்திரமோகன் அவர்கள் நூற்களைப் பெற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
திரு. ராஜாராம், திரு.வெங்கடரமணி, திரு.சிவராஜ்குமார், திருமதி. சுவர்ணா, திருமதி.கோகிலவாணி,
திரு,வாசுதேவன் சார்பாக திருமதி.ஜெயஸ்ரீ, திருமதி.சாவித்ரி, திரு. தேவதாஸ் ஆகியோர்
மதிப்புரையாற்றினர்.
நான் ( நூல் ஆசிரியர் மஸ்கட் மு. பஷீர் ) ஏற்புரை ஆற்றினேன்.
முன்னதாக திரு.சுந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்த, திரு.சபரிக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மஸ்கட் தமிழ்ப் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் கலந்து நிகழ்வைச் செம்மையுற சிறப்பித்தனர்.


Monday, August 14, 2017

‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற என்னுடைய இரு கவிதை நூற்கள் வெளியீட்டு விழா

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
‘கோடங்கி’ மற்றும்  ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற என்னுடைய இரு கவிதை நூற்கள் வெளியீட்டு விழா சென்ற 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு குமரிமாவட்டம், திருவிதாங்கொடு முஸ்லிம் கலைக்கல்லூரி கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

அரபித்துறைத் தலைவரின் மறைவாழ்த்தோடு தொடங்கிய விழாவில் பேராசிரியர். அஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர். ஹாமீம் முஸ்தபா கவிதைகளினூடே பயணித்து விழாவினைத் தொகுத்து வழங்கினார்,
HKRR கல்லூரி, உத்தம பாளையம். பேராசிரியர். முனைவர் மு. அப்துல் சமது தலைமையேற்று விழாத் தலைமையுரையாற்றினார்,
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார்
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘கோடங்கி’ கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்கால சமூகத்தின் அவலங்களையும், மானுடத்தின் இன்றைய சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக எளிமையாகவும், அற்புதமாகவும் கவிதைகள் அமைந்திருப்பதாக அழுத்தமான, நெகிழ்ச்சியான, அற்புதமான உரையாற்றினார்.
‘நட்சத்திரச் சிதறல்கள்’ கவிதை நூலை நெல்லை வானொலி நிலைய இயக்குனர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் வெளியிட்டு கருத்தாழமிக்க, சுவையான உரையை நிக்ழ்த்தினார்.
‘கோடங்கி’ கவிதைநூலை பத்திரிகையாளர், எழுத்தாளர், திரு, சோழ நாகராஜன் பெற்றுக்கொண்டு சில கவிதைகளை மேற்கோள்காட்டி அருமையான வாழ்த்துரை வழங்கினார்.
தெற்கெல்லை தியாகியும், பத்திரிகையாளருமான திருமிகு. கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ நூலைப் பெற்றுக்கொண்டு யதார்த்த வாழ்வின் நிலைகளை தன்போன்ற வயதொத்தவர்களும் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருப்பதாக கவிதைகளை மேற்கோள்காட்டி வாழ்த்துரை வழங்கினார்,
அரசியலின் அப்பழுக்கற்ற மனிதராக இன்றளவும் வாழ்ந்து சிறப்பிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ திரு, முகமது இஸ்மாயில் அவர்கள் இரு நூற்களையும் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வெளியிடப் பெற்றுக்கொண்டார்,

என்னுடைய நன்றியுடன் கூடிய ஏற்புரையில் கோடங்கி கவிதைகள் உருவானது பற்றியும், அதன் காட்சியியல் கருவுருவானவிதம் பற்றியும், சமூக அக்கறையுடன் கூடிய கவிதைகளின் தோற்றம் பற்றியும் எடுத்துரைத்து, தன் இலக்கியப் பயணத்தில் துணை நின்றவர்களையும், விழாவில் வந்து சிறப்பித்த இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப் பெரியவர்கள், மாணவ மாணவியர் அனைவருக்கும் நன்றி கூறினேன், கவிக்கோ அவர்கள் இருந்து நடத்தியிருக்கவேண்டிய விழா எனக்கூறி கவிதை நூலை கவிக்கோவுக்கு சமர்ப்பித்து நெகிழ்ந்தேன்.
விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை முஸ்லிம் கலைக் கல்லூரித் தாளாளர், லயன். Dr. H. முகமது அலி அவர்களின் வழிகாட்டலின்பேரில் கல்லுரியின் முதல்வரும், பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர், அரங்கம் நிறைந்த விழாவாகவும், நெஞ்சம் நிறைந்த விழாவாகவும் விழா செவ்வனே நடந்தேறியது.

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது