மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Friday, February 21, 2014

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு – மு. பஷீர்

பிப்ருவரி 14, 15 16-ஆம் தேதிகளில் கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த இலக்கிய மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஒமான் மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள், முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

‘திருவினுந்திருவாய்’ மற்றும் ‘ரபியுல் வசந்தம்’ என்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய இசக் குறுந்தகடுகளை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா பெற்றுக்கொண்டார். நான் (மஸ்கட் மு. பஷீர்) வாழ்த்துரை வழங்கினேன். பிரபல எழுத்தாளர், பேச்சாளர், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


ஆய்வரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கு, இன்னிசையரங்கு, தமிழறிஞர் கெளரவிப்பு, நூல் வெளியீடு, இசைக் குறுந்தகடுகள் வெளியீடு, இசை, இஸ்லாமிய பாரம்பரிய இசை மற்றும் கலைவடிவங்கள், நிகழ்த்துக் கலைகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், இசைமேதைகள் எனப்பலருக்கும் விருதுகள் மற்றும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தனர்.

சாகித்திய அகடமி விருது பெற்ற படைப்பாளர் ஜே.டி. குருஸ், எழுத்தாளர் அ. மார்க்ஸ், சாத்தான்குளம் அப்துல் ஜபார். பாரதி கிருஷ்ணகுமார் உட்பட முக்கிய தமிழ் இலக்கிய படைப்பாளும், நீதியரசர் கே.என். பாஷா, ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா, இசையமைப்பாளார் ஜிப்ரான், தாஜ்னூர், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், கவிக்கோ அப்துல்ரஹ்மான் எழுதிய ‘பாலை நிலா’ நூல், ஆய்வுக்கட்டுரை, விழா மலர் உட்படப் பலநூற்களும் வெளியிடப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள ’சூஃபி இசை நிகழ்ச்சியை’ தாஜ்னூர் பிரம்மாண்டமாக நிகழ்த்தினார்.


இலக்கியத்திலும், இசையிலும் இதயங் குளிர்ந்த மிகச் சிறந்த விழாவாக மூன்று நாள் நிகழ்வும் மனதுக்கு நிறைவானதாக அமைந்தது. தலைவர். கவிக்கோ அப்துல்ரகுமான், நெறியாளார். கேப்டன் அமீர் அலி, செயலாளர்.அப்துல்சமது, பொருளாளர். ஷாஜஹான் மற்றும் கிஸ்வா நிர்வாகத்தினர் சிறம்பட ஆற்றிய பணிகள் மிகப் பாராட்டத்தக்கவை!

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது