மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Thursday, January 16, 2014

பொங்கல் கவியரங்கம். தலைப்பு: பொங்கட்டும் பொங்கல்
நாள்: 14-1-2014 காலை. மஸ்கட் 'ஸ்பைஸி வில்லேஜ்'
தலைமைக் கவிதை. மு. பஷீர்

‘தை’ மகள் பிறந்தாள் -கவி
‘தை’ மகள் பிறந்தாள்
கவி‘தை’ மகள் பிறந்தாள் !
தமிழ்த்தாயின் கவி‘தை’ மகள் பிறந்தாள் !

தத்‘தை’ அழகுடன்
இத் ’தை’ பிறந்தாள் !
முத்’தை’ சிப்பிக்குள்
வித்’தை’யாய் ஒளிர்ப்பித்து
இத் ‘தை’ பிறந்தாள் !

பச்சைக் கதிர் நாற்றில்
பசியரக்கன் அழிந்திடவே
பிச்சை எனும் சொல்லை
கச்சை கட்டி விரட்டிடவே
இத் ‘தை’ பிறந்தாள் !

வரப்புக்கரைத் தொட்டிலிலே
உறங்கும் கைக்குழந்தை
களையெடுக்கும் தாயின்பாட்டு
குழந்தைக்கு தாலாட்டு !

நிலவுக்கே சென்று
நீந்திப்பேர் பெற்றாலும்
உழவுக்கு சேறு நீந்தும்
உழவனுக்கு நிகரேது !

கலைப்பையோட்டி சேறுடைக்கும்
கதிர்வந்தால் சோறுடைக்கும்
கதிரவன்ஒளி சுட்டெரிக்கும்
காணுமிடமெல்லாம் பயிர்விரிக்கும் !

காளைஎருது துணைநிற்கும்
களத்துமேடு நெல்லறைக்கும்
கண்ணின் மணியாய் நெற்
பொன்மணி நிறைக்கும் !

பட்டகட்டமெல்லாம் அனலில்
சுட்ட பூவாய்க்கருகி
சொட்டும் இன்பமாய் வான்
முட்ட உயர்ந்து நிற்கும் !

பொங்கட்டும் பொங்கல்
தமிழ் மொழிபோல்
திக்கெட்டும்
துலங்கட்டும் பொங்கல் !

வெள்ளலையாய் பொங்கட்டும் இன்பம்
தெள்ளமுதாய் பொங்கட்டும்
கொள்ளளவு குறையாத
கடலளவுச் செல்வம்
சந்ததிக்கும் பொங்கட்டும் !

கற்றோர்க்கும் மற்றோர்க்கும்
உற்றார்க்கும் தோழர்க்கும்
உவகையாய் உதவிட ஈகை
உள்மனமும் பொங்கட்டும் !

தீவினை செய்தோர்க்கும்
நல்வினை செய்யுமனம்
தெய்வம் நீ தருகவென இத்
‘தை’நாளில் வேண்டுகிறோம் !




...... தொடர்ந்தது கவிஞர்களின் கவிதைகள்...
திரு. இரா.அமுதக் கண்ணன், திரு. அஹமதுஜமீல், திருமதி. சுவர்ணா சபரிக்குமார், திருமதி. அல்தாஜ் பேகம், திருமதி. விஜயலக்ஷ்மி மகாலிங்கம், திருமதி. திலகவதி ரத்தினகுமார் கவிமழை பொழிந்தனர்.

.. நிறைவுக் கவிதையுடன் இனிதே கவியரங்கம் நிறைவேறியது!
‘ பொங்கல் விழா’ வில் ‘ பாட்டு மன்றம்’

மாதம் ஒரு சங்ககத்தின் (MOS) சார்பில் 14-ஆம் தேதி பொங்கலன்று சிறப்பாக நடந்தேறிய ‘ பொங்கல் விழா’ வில் ‘மஸ்கட் இலக்கிய வட்டம்’ சார்பில் ‘ பாட்டு மன்றம்’ சிறப்பாக  நடந்தேறியது.

'மக்கள் மனதை பெரிதும் கவர்ந்து நிலைத்து நிற்பது... பழைய பாடல்களா ? புதிய பாடல்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது. நடுவராக நான் (மு. பஷீர் தான்) அமர்ந்து நடத்திய பாட்டுமன்றத்தில்,  ‘பழைய பாடல்களே’ என்ற அணியில் திரு. அன்வர் அலியும், திருமதி. விஜயலக்ஷ்மி யும் அருமையானப் பாடல்களைப் பாடி வாதாட, ‘புதிய பாடல்களே’ என திருமதி. சுவர்ணா சபரிக்குமரும், திருமதி. ஜானகி கர்ணனும் ஆணித்தரமான வாதத்துடனும், பாடல்களும் பாடி அழகு சேர்த்தனர்.



இறுதியாக நடுவர் தீர்ப்பு இனிமையும், சுவையும், கருத்தாழமும், சமுதாயப் பார்வையும், குடும்ப உறவுமுறைகளின் உந்தமும், இலக்கிய நயமும், அழகு  நடையும் காலத்தையும் கடந்து நிற்பவை புதிய பாடல்களை விடப் பழைய பாடல்களே எனது தனது வாதத்தை பாடல்களையும் பாடித் தீர்ப்பளித்தேன்.
பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அனவரும் சேர்ந்து அழகிய போங்கலை  சமைத்து வழங்கினர். பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும், டராகம் சங்கமம் குழிவினரின் இனிமையான மெல்லிசைப் பாடல்களும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தன.
காலைக் கவியரங்கம் தமிழ் மணம் பரப்பியது. மதிய உணவு சுவை சேர்த்தது.
தமிழகத்தில் ஒரு பொங்கலைக் கொண்டாடிய மகிழ்வும், தொலைக்காட்சிப் பொங்கலை விட்டு சுவையான சர்க்கரைப் பொங்கலை சுவைத்து மகிழ்ந்த உற்சாகமும் இன்னும், என்றென்றும் இனித்துக் கொண்டேயிருக்கும் !

பொங்கலோ பொங்கல் ! பொங்கிற்று பொங்கல் !

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது