மஸ்கட்.மு.பஷீர் கவிஞர். ஆசிரியர். 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் வெளியீடு 2012. கலாச்சார & இலக்கிய செயலாளர். மஸ்கட் தமிழ் சங்கம். பொறுப்பாளர், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், ஒமான். தகவல் தொழில் நுட்பத்துறை மேலாளார்,மஸ்கட், ஓமான். என் பயணமும், ஆர்வமும்: தமிழ் இலக்கியம், கவிதை, சிறுகதை,மேடைப் பேச்சு, பட்டிமன்றம்,அரட்டை அரங்கம், ஆய்வரங்கம் தமிழ், தமிழர் வரலாறு, குமரிக் கண்டம் பற்றிய வரலாறு, தொல்லியல் வரலாற்று தேடல்,அவை பற்றிய படைப்புகளை வெளியிட ஆர்வம்.
மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.
மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece
Tuesday, July 9, 2013
Thursday, April 25, 2013
ஏப்ரல் 18 ஆம் தேதி நிஸ்வாவில்
நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு தமிழர் சங்கமம் விழாவின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவர்
கவிஞர். மு.பஷீர் மற்றும் பேச்சாளர்கள் திரு,சண்முகம், திருமதி.ராதா அஷோக், திருமடி.சுவர்ணா
சபரி, திரு.அன்வர் அலி பங்கேற்றனர்.
னகைச்சுவையுன், இலக்கியமும்,
கருத்துச் செறிவும் சிறக்க, மிகச்சிறப்பாக நடந்தேறியப் பட்டிமன்றத்தினை நிஸ்வா வாழ் தமிழ் மக்கள் வெகுவாய் ரசித்தனர். மிகச்
சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
Thursday, April 11, 2013
Thursday, March 7, 2013
Paalai Pookal - Review பாலைப் பூக்கள் கவிதை நூல் பின்னூட்டம்
என் அன்பு நண்பர்களுக்கும், அறிவுசார் பெருந்தகையோர்க்கும் !
நெஞ்சார்ந்த வணக்கம் !
பாலைப் பூக்கள் கவிதை நூல் பற்றிய தங்களின் மதிப்புரையும், விமரிசனமும், பின்னூட்டமாய்த் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் ! இந்த மின்னஞ்சலில் muscat.basheer@gmail.com
அந்த ஊட்டம் எனக்கு ஊக்கமாகவும் இனிவரும் படைப்புக்களை இன்னும் சிறப்பாய்ச் செய்ய தூண்டுகோலாகவும் அமையும் என எண்ணுகிறேன்.
அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்...அதில் பெறும் வழிகாட்டுதல்களைக் கொண்டு எஞ்சிய பயணத்தைத் தொட ஆவல் கொள்கிறேன்...
கரை கொண்ட வெள்ளம் ஒழுகுவது போல்
காட்டாறாய் அல்ல..சமூகக்
கட்டுக் கட்டுக்குள் நின்று..!
அன்புடன் மஸ்கட் மு. பஷீர்.
muscat.basheer@gmail.com
நெஞ்சார்ந்த வணக்கம் !
பாலைப் பூக்கள் கவிதை நூல் பற்றிய தங்களின் மதிப்புரையும், விமரிசனமும், பின்னூட்டமாய்த் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் ! இந்த மின்னஞ்சலில் muscat.basheer@gmail.com
அந்த ஊட்டம் எனக்கு ஊக்கமாகவும் இனிவரும் படைப்புக்களை இன்னும் சிறப்பாய்ச் செய்ய தூண்டுகோலாகவும் அமையும் என எண்ணுகிறேன்.
அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்...அதில் பெறும் வழிகாட்டுதல்களைக் கொண்டு எஞ்சிய பயணத்தைத் தொட ஆவல் கொள்கிறேன்...
கரை கொண்ட வெள்ளம் ஒழுகுவது போல்
காட்டாறாய் அல்ல..சமூகக்
கட்டுக் கட்டுக்குள் நின்று..!
அன்புடன் மஸ்கட் மு. பஷீர்.
muscat.basheer@gmail.com
Saturday, January 5, 2013
‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா'
‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா'
நாகர்கோவில்
டிச,16
மஸ்கட்டில் வாழ்ந்து வரும், குமரி
மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’
என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில்
சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட
முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும்
கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில்
ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது
ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார்.
கவிஞர் மஸ்கட்.பஷீர் மரங்கள், காகம், காற்று, மகாத்மா
காந்தி பற்றியும் மற்றும் காதல், சமுதாயத்தின் பல்வேறு தாக்கங்களையும் பற்றியும் எழுதிய
கவிதைகள் மிகுந்த கருத்தாழம் மிக்கவை எனப் பாராட்டினார். இன்னும் தொடர்ந்து பஷீர் அவர்கள்
சிறுகதை, புதினம் போன்றவை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள்
தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார்.
ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’
பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச்
சென்றுவிட்டன எனப் பாராட்டினார்.
இந்தக் குமரிமண் தமிழின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
காரணமான மண் மட்டுமல்ல அது மிகச்சிறந்த புலவர்களையும், கவிஞர்களையும் உருவாகிய மண்
எனக் குறிப்பிட்டார்.
கவிஞர் பஷீர் அவர்களைப் பாராட்டிப் பேசிய கவிக்கோ
அப்துல்ரகுமான் அவர்கள், தொடர்ந்து இன்னும் சிறந்த நூல்களை அவர் எழுத வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டார்.
விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர
ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய
கவிதை எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின்
ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார்.
நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர்
கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல்
பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில்
சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார்.
வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும்
எடுத்துக் கூறினார். குமரிமாவட்டம் தந்த சிறந்த கவிஞர்கள் வரிசையில் மஸ்கட்.பஷீரும்
இணந்துகொண்டார் எனப் பாராட்டினார்.
தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி,
மு.பஷீர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.
விழாவில்
நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர்
ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர்.
ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட்
அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,
குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை
சிறப்பித்தனர்.
http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece
Tuesday, February 14, 2012
Subscribe to:
Posts (Atom)
டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது
தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது








