மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Thursday, September 27, 2018

எண்ணமும் எழுத்தும் ! வள்ளுவம் ! குறள் கூறும் அறம்! © தொடர்ச்சி-4 மு.பஷீர்


அறம் என்பது சமுதாயத்தின் வழிவழியாய் வருகிற உயர் நிலைப் பண்பெனக் கொண்டோமானால், அது நமது தமிழ்க் கலாச்சாரத்துடன் காவலாய் என்னாளும் இருந்து வந்திருக்கிறதென்பது என்ற உண்மையையும் நாம் அறியவேண்டும்.
அது காலத்துக்குக் காலம் தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்தது என்பது கண்கூடான உண்மை.

தமிழர்களின் சிறந்த பண்பாட்டுமுறைகள் தனிமனித, சமுதாய முன்னேற்றத்துக்கான காரணிகளாகப் பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் காலம் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் இருந்துள்ளன. ஆகவே அறம் என்பதுகூட காலம் சார்ந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது.

பரத்தமை ஒழுக்கம், கள்ளுண்ணுதல் போன்றவை சங்க இலக்கியங்களில் கடிந்து பேசப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்ததைக் காணும்போது, வள்ளுவப் பெருந்தகை அதனை ஆணித்தரமாக அவற்றை கைவிடச்சொல்லும் முறைகள் அறத்தின் காலம் சார்ந்த மெருகேற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.

'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று சொல்லி ஆணுக்கான அறவொழுக்கத்தை நிர்ணயித்தார். தனது மனைவியை விடுத்துப் பிற பெண்களுடனான தொடர்பினை, பரத்தையர் தொடர்பினை ஒழுக்கமற்ற செயலாகக் கண்டித்தார் வள்ளுவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.  – குறள் 34

ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை என்பார் மு.வ.

உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து, ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்து வந்தாலே போதும். மனம் சார்ந்து பிறப்பதுதான் அறம். ஆகவே மனம் சுத்தமானதாக இருந்துவிட்டால் செய்யும் செயல்களெல்லாம் அறமாகவே அமையும்.
ஆம் உள்ளத்தில் குற்றம் இல்லாது இருத்தலே அறமாம். 

வள்ளுவர் கூறும் அறன் வலியுறுத்தலின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.


மனிதனின் அனைத்து செயல்களும் பிறப்பது எண்ணங்கள் மூலம்தானே.
எண்ணம்தானே எல்லாக் காரியங்களுக்கும் ஊற்றாய் அமைகிறது.
ஆகவேதான் அத்தகைய எண்ணத்தை, மனத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் அதன்மூலம் எல்லாக் கட்டுப்பாடுகளும் அதனுள் அடங்கிவிடுமல்லவா..!

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – குறள்-34

ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை ( மு.வ உரை).

அதாவது மனதை மாசற்றதாக ஆக்கிக்கொள் என அறிவுரை தருகிறார் நமக்கு. மனம் மாசற்றதாக ஆகிவிடும்போது எல்லாமும் நன்மையாகிவிடுகிறது.

வள்ளுவர் சொன்ன இதேக் கருத்தை உள்ளடக்கித்தான்;

'சினமடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனமடக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!’
எனத் தாயுமானவரும் கேட்கிறார்.

ஆனால் மனம் களங்கப்பட்டதாக இருக்கும்போது அது இழிவான செயல்களையே செய்ய நம்மை முற்படுத்தும்.  மனம் சுத்தமாகாமல் உடலும், உடையும் சுத்தமாகச் சென்று, மனதுக்குள் கெட்டவற்றை எண்ணி இறைவனை வழிபட்டால், நம்முடைய பிரார்த்த்னைகளை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதே உண்மை.


No comments:

Post a Comment

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது